Tuesday, October 21, 2008

அவன்....அவள்....அது

அவன்: "ஏய்...நீ ரொம்ப அழகா இருக்க."
அவள்: "எப்போ பாரு ஜொள்ளு தானா? உங்களுக்கு வேற ஒன்னுமே தெரியாதா?"
அவன்: அப்படி கோச்சுக்கும்போத்தும் கூட நீ அழகா தான் இருக்க தெரியுமா?
அவள்: இதே வார்த்தை தானே அந்த கீழு தெரு சரோஜா கிட்டேயும் சொன்னீங்க?
அவன்: ஐயோ. இது என்ன வம்பா போச்சு. நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். என் மேல இப்படி அபாண்டமா பழி போடற.
அவள்: எனக்கு எல்லாம் தெரியும். சும்மா இந்த புருடா எல்லாம் விடாதீங்க.
அவன்: ஹ்ம்ம்...நான் சொன்ன நம்ப மாட்ட. சரோஜா சொன்னா மட்டும் நம்புவ.
அவள் : அப்படி தான் வேச்சுகொங்களேன்.
அவன்: இந்த மாலை எவ்வளவு வாசனையா இருக்கு தெரியுமா?
அவள்: அட. உங்களுக்கு வாசனை எல்லாம் வருமா?
அவன்: கிண்டல் தானே. ஏதோ அன்னைக்கி ஜலதோஷம் இருந்துது அதுனால உன்னை பார்க்க வரும்போது வாசனை வரலைன்னு சொன்னேன். அதையே பிடிச்சிண்டு இருந்தா எப்படி.
அவள்: பார்க்கிற மாதிரியா வந்தீங்க? வேர்த்து விறுவிறுத்து...யப்பா. உங்க கிட்ட கூட நெருங்க முடியல.
அவன்: பின்ன? வேலை முடிஞ்சு வந்தா உங்க ஊருல என்ன சந்தனமும் ஜவ்வாதும் கலந்தடிச்ச வாசனையா வரும்?
அவள்: பண்றதை எல்லாம் பண்ணிட்டு நல்லா சாக்கு சொல்லுங்க.
அவன்: ஒரு அப்பாவி மேல இப்படி அநியாயமா பழி போடறியே?
அவள்: யாரு? நீங்க அப்பாவியா? இத்தனை பேரு நம கல்யாணத்துல சுத்தி இருக்காங்க, அப்போ கூட சில்மிஷம் பண்றீங்களே, நீங்களா அப்பாவி?
அவன்: என் என் ...என்ன பண்ணிட்டேன்?
அவள்: உண்மையை சொல்லுங்க? உங்க காலால நீங்க என் காலை வருடல?
அவன்: ஒரு இளைஞன் ஒரு இளைஞ்சி கை காலை பிடிக்கிறது ஜகஜம். ஏன்னா இது வாலிப வயசு.
அவள்: வாலிப வயசா? இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி நக்கல் தான். 3 கழுதை வயசாச்சு உங்களுக்கு.
அவன்: இப்படி எல்லாம் வெட்ட வெளிச்சமா உண்மையை வெளில சொல்ல கூடாது. உன் புருஷன் மானம் தானே போகுது.
அவள்: சரி...விஷயத்துக்கு வருவோம். என்ன வாசனை வருது உங்களுக்கு?
அவன்: ஹ்ம்ம்....நல்ல ரோசாப்பு வாசனை வருது. அது கூடவே ஏதோ தூக்கலா ஒரு வாசனை. அநேகமா உன்கிட்டேருந்து தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
அவள்: ஹையோ. உங்களை திருத்தவே முடியாது.
அவன்: உண்மையை சொல்லு. உனக்கு மனசுக்குள்ள குளிர்ச்சியா இல்லை? பொய் சொல்ல கூடாது.
அவள்: (தயங்கி) இருக்கு......
அவன்: பார்த்தியா. பிடிச்சிருக்கு. ஆனா வெளில பண்ற பந்தா எல்லாம் ஏதோ ஒன்னுமே பிடிக்காத மாதிரி தான்.
அவள்: ஹீ ஹீ. ஆமா...இத்தனை பேரு நாம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெக்கிறாங்களே, மழை பெய்யும்ன்னு நினைக்கிறீங்க?
அவன்: மழை பெய்யனும்னா மரம் வேணும். அந்த மரத்தை எல்லாம் கட்டிடம் எழுப்பறவன் வேட்டிடான். ஏறில இருந்த தண்ணியையும் மணலையும் இவனுங்களே லாரில அனுபிச்சாங்க. அப்புறம் உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணினா மட்டும் எப்படி மழை பெய்யும்??????
அவள்: இதோ வரான் பாருங்க என் எஜமான். பரதேசி!!!! மனசாட்சியே இல்லாம அவ்வளவு துணியை என் முதுகுல ஏத்தறான் படுபாவி.
அவன்: கவலை படாதே செல்லம். அடுத்த ஜன்மத்துல நாம மனுஷனா பொறந்து, அவன் நம்ம மாதிரி கழுதையா பொறக்கணும், நம்ம கிட்டயே வேலைக்கி சேரனும். மவனே! அதுக்கு வால்ல வெடி வெச்சு கொளுத்தி ஓட ஓட விரட்டறேன்.
அவள்: வேணாங்க. நமக்கு எதுக்கு இந்த வீணா போன மனுஷ பிறவி. கொறைஞ்ச பட்சம் நாமளே நம்மோட இனத்தை வேட்ட்றதும் கொல்றதும் இல்லையே.
அவன்: நமக்கு இருக்கிற அறிவு இந்த கழுதைங்களுக்கு இல்லாம போச்சே.

இரண்டு பெரும் சிரிக்கிறார்கள்....சாரி....கனைக்கிறார்கள்.

11 comments:

gils said...

rotfl..:D:D:D:D:D:D i was imagining u with u-know-who first..ending justified it :D :D :D

SKM said...

:D :D :D too good.:D

SKM said...

very true.really!They are better off as donkeys .manushanukku mattumdhaandhan "MEAN" aa behave saiya mudiyum . I just love the way you express.Keep going Harish.

Dimplicious said...

Thot it was jus a tamil version of ur "he-she" posts til I read abt "gettin marryd-rain" part!!Hmmm...gud one!!Ur usual style na!!Oh even a donkey's romance seems cute nowadays!!!Aanaa unga thought-provokin posts kku oru alavae illa..indha post la kuda u hv made ppl tink wid d lil nuances in the end!!

Priya said...

:) :) funny funny.

Unknown said...

thala.. Inglipees, Indi, ippo tamil.. ungala purinjikirave mudiyale.. awwwww..

Unknown said...

aama.. indha comment box eppadi vandhudhu.. saw in Gils blog too.. gimme the code plz..

KK said...

Top Tukker Thalaiva!!

prithz said...

Bulb! :(

Anonymous said...

:) ungala mattum dhan mudiyum

nandoo said...

@gils - rotfl ha ha ha